காரைக்குடி, ஜன. 17: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா, திருவள்ளுவர் விழா மற்றும் ஆசிரியர்கள் தினவிழா என முப்பெரும் விழா நடந்தது. பதிவாளர் வசீகரன் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், `வள்ளுவம் என்ற தலைப்பில் தமிழில் எழுத்தப்பட்ட நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கருத்துச்செறிவு நிறைந்த கலாச்சார பதிவுகளை கொண்ட இந்நூலை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது’ என்றார். விழாவை துவக்கிவைத்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், `தமிழர்களின் பண்பாடு, அடையாளத்தை பறைசாற்றும் விழா பொங்கல், உலகை அச்சறுத்தும் தீய கிருமி உள்பட அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி’ என்றார்.