539 குவார்ட்டர் பாட்டில் பறிமுதல்

சிவகங்கை, ஜன. 17: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 539 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறையாகும். இதையடுத்து நேற்று முன்தினமே டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்த நபர்களிடம் இருந்து 539 மதுபாட்டில்களை மாவட்டம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: