கீழக்கரை, ஜன.17: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போலி கருப்பட்டிகளை சிலர் விற்பதால், பதனீரில் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கு சீசன் நேரத்தில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக சாயல்குடி பனைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.