×

சிறுமலையில் குதிரை பொங்கல்

திண்டுக்கல், ஜன. 17: திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் பழையூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, புதூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன இக்கிராமங்களில் சாலை வசதி கிடையாது. இங்கு வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய் போன்றவற்றை பயிர் செய்கின்றனர். மலைப்பகுதியில் விளையும் காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை ஊர்களுக்கு கொண்டு செல்ல குதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குதிரையாவது இருக்கும். பின்பு கிராமங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் பேருந்து மூலமாக திண்டுக்கல்லிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.

தமிழகத்தில் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால், சிறுமலை கிராமங்களில் பொங்கலுக்கு அடுத்த நாள் குதிரை பொங்கல் கொண்டாடினர். தங்களுக்கு உறுதுணையாக இருக்க கூடிய குதிரைகளை குளிப்பாட்டி அதற்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து படைத்து குதிரைக்கு ஊட்டினர். பின்னர் அனைத்து குதிரைகளும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதனை சுதந்திரமாக விட்டனர். தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரையை தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags : Sirumalai ,
× RELATED சிறுமலை கோயிலில் பிரதோஷ வழிபாடு