நாமக்கல், ஜன.17: நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையத்தில், மேற்கு நகர திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கலையொட்டி இந்த நினைவு கொடி கம்பத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் திமுக கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு நகர பொறுப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ராணி, சட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் கெளதம், பழனிவேல், நவலடி, தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், செல்வமணி, ரவிச்சந்திரன், அன்பரசன், அன்பரசு, மனோகரன், செல்வகுமார், அருள் செல்வன், ராஜவேல், மாணவரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி, நந்தகுமார் மற்றும் வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.