திருச்செங்கோடு, ஜன.17: தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவால், சென்னையில் நேற்று காலமானார். இதையடுத்து நாமக்கல் மேற்கு மாவட்ட தமாகா சார்பில், திருச்செங்கோடு காமராஜர் சிலை அருகில், மாவட்டத்தலைவர் செல்வகுமார் தலைமையில் ஞானதேசிகன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் சதீஷ்குமார், தீபக்ராஜ், கார்த்திக், இளங்கோ, சாம் பிரசன்னா, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நாமக்கல் மேற்கு மாவட்ட பகுதியில் தமாகா கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது