சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து அவ்வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2 பேர் வைத்திருந்த பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (48), உத்தமபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45) என தெரியவந்தது. அவர்களை கைதுசெய்து ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்கள் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்