×

தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகர், ஜன. 13:தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் மேகமூட்டத்துடன் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். நேற்று அதிகாலை வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு: சாத்தூர் 1, திருச்சுழி 3, காரியாபட்டி 2.40, பிளவக்கல் 2.20, கோவிலாங்குளம் 1.80 என பதிவாகி உள்ளது.  

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...