கம்பம், ஜன. 13: கம்பம் நகர திமுக சார்பில் தமிழர் திருவிழா, கட்சியினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கம்பம் நடராஜன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர், 33 வார்டுகளைச் சேர்ந்த சுமார் 600 திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். கம்பம் நகர பொறுப்பாளர்கள் (வடக்கு) வக்கீல் துரை நெப்போலியன், (தெற்கு) சூர்யா செல்வக்குமார் ஆகியோர் பேசுகையில், ‘வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலில் அதிமுக அரசின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, திமுகவுக்கு வாக்கு சேகரிப்பத்தில் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும்’ என விளக்கினர்.