மானாமதுரை, ஜன.13: மானாமதுரை அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார். மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் விக்னேஸ்வரன்(20). இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நாகரத்தினம் (28) என்பவரும் மானாமதுரையில் இருந்து மேலப்பசலைக்கு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தனர். சங்கமங்கலம் அருகே சென்றபோது அவர்களுக்கு பின்னால் வந்த டூவீலர் உரசியபடி சென்றது. இதில் நிலைகுலைந்த விக்னேஸ்வரன், நாகரத்தினம் டூவீலருடன் வலதுபுறம் சென்ற லாரிக்குள் விழுந்தனர்.