சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காணும் பொங்கல் அன்று ஒன்று கூடுவதை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுற்றுலா இடங்களான மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உட்பட மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.