காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து இருவர் படுகாயம்

பந்தலூர், ஜன. 13: பந்தலூர் அருகே விலங்கூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஈஸ்வரன் (51). இவர் நேற்று முன்தினம் அருகே உள்ள மேய்சல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை இவரை துரத்தியது. யானையிடம் இருந்து உயிர் தப்பிக்க  ஓடியதில் கீழே  விழுந்ததில் காயமடைந்தார். அவரை  அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து பிதர்காடு ரேஞ்சர் மனோகரன் மற்றும்  வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிதர்காடு வனச்சரகம் ஏலமன்னா பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன் (27). இவர் தன் நண்பர் உதயசூரியனுடன் அம்புருஸ் வளைவு பகுதியில் இருந்து ஏலமன்னா பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்து குறுக்கிட்ட யானை ஒன்று இருவரையும் துரத்தியது. இவர்களை துரத்திய யானை பாலகிருஷ்ணனை தும்பிக்கையால் தட்டியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம்  அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் வனத்துறையினர் அவரை  மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: