கூடலூர், ஜன. 13: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு தீ மேலாண்மை மற்றும் ஆபத்துக் கால முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறையின் பயிற்சி பெற்ற வன உயரடுக்கு படை (Elite Force) உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு தீ மேலாண்மை, முதலுதவி சிகிச்சை, வனப் பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள், ஆற்று படுகைகளை கயிறுகள் கொண்டு கடப்பது, உயரமான மரம் மற்றும் கட்டிங்களில் ஏறுவது, போன்ற பயிற்சிகளும் செயல் முறை மூலம் விளக்கமும் நேற்று அளிக்கப்பட்டது. இந்தியாவிலையே முதன்முறையாக தமிழக வனத்துறையில் நமது பாரம்பரிய இன நாய்களான கன்னி, கோம்பை, சிப்பிப்பாரை, பாரை போன்ற பயிற்ச்சியளிக்கப்பட்ட நாய்கள் வனக்குற்றங்களை கண்டறிவதில் செயல்படும் விதங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: வன உயரடுக்கு படையானது குரங்கனி தீ விபத்திற்கு பின்பு அதுல்யா மிஸ்ரா பரிந்துரையின்படி உருவாக்கப்பட்டுள்ளது.