குறிச்சி அரவாண் பண்டிகையை சிறப்பாக நடத்த முடிவு

கோவை, ஜன. 13: கோவை குறிச்சி அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் கூட்டம் குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அரவாண் பண்டிகை நடைபெறவில்லை. வரும் ஆண்டில் அரவான் பண்டிகையை சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும், குண்டத்து மாகாளியம்மன் கோவில் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், போத்தனூர் காவல் ஆய்வாளர் முரளிதரன், நிர்வாக குழுவை சேர்ந்த மரகதம், கே.ஏ.பத்மகுமார், சவுந்தரராஜன், வடிவேல் உள்பட பலர் பேசினர்.

Related Stories: