திருச்செங்கோடு, ஜன.13: திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் முன்பு, ஊழியர்களை காப்பீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் இலக்கு நிர்ணயித்து, அவற்றை அடைந்தே தீரவேண்டும் என வறபுறுத்துவதை கண்டித்து, அஞ்சல் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சங்க கிளை செயலாளர்கள் விஜயகுமார், ஜெகதீஸ்வரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.