திருவள்ளூர்: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கம் பணிக்கு விவசாய நிலங்களை கைப்பற்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் திருவள்ளூர் கலெக்டர் பொன்னையாவிடம் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவின் விவரம்: தமிழக அரசு சென்னை எல்லை சாலை திட்டத்துக்கு மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கம் பணிக்கு நிலம் கைப்பற்றுவதற்கு செய்து வருகின்றனர். இதில் மேலானூர், கீழானூர், விஷ்ணுவாக்கம், கரிகலவாக்கம், வெள்ளியூர் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.