மதுராந்தகம்: ஆத்தூர் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க, சுங்கச்சாவடி ஊழியர்களுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்வது வழக்கம். அப்போது, சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன ஓட்டிகள் எவ்வித பிரச்னையும் இன்றி பயணம் செய்யவும் அச்சிறுப்பாக்கம் போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது, அனைவரும் வாகன ஓட்டிகளிடம் முகம் சுளிக்க கூடாது.