ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்

பெரம்பலூர், ஜன. 13: ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் நிறுவனம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அஸ்வின்ஸ் நிறுவனம் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு பெயர் பெற்றது. தமிழகத்து பெண்மணிகள் தான் எங்கள் நிறுவனத்தில் அதிகளவில் வேலை செய்வதால் தான் எங்களால் தரமான மற்றும் சுவையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிகிறது. அதனால் இந்த பாரம்பரிய தினமான பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் ஏதேனும் புதிய பொருட்கள், ஆபர் என அறிவிக்கிறோம். இந்த பாரம்பரிய பொங்கல் பண்டிகையை நாங்கள் எங்கள் அஸ்வின்ஸ் குடும்ப உறுப்பினர்களான ஊழியர்களுடன் புத்தாடையுடன் கொண்டாடுகிறோம். அதேபோல் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது குடும்பத்துடன் இந்த விழாவை கொண்டாடி மகிழ வேண்டும். இவ்வாறு அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: