பெரம்பலூர், ஜன.13: கணவர் திருச்சி சென்ற நேரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அறைக்குள் ஓடி தப்பினர். நாமக்கல் மாவட்டம் தோளூர்பட்டியை சேர்ந்தவர் குமார்(42). இவரது மனைவி மதுரை மாவட்டம் வாடிபட்டியை சேர்ந்தவர் மகாலெட்சுமி(35). இவர்களுக்கு ஜெய (10). மோனிகா (2) என 2 மகள்கள் உள்ளனர். பெரம்பலூர் அருகே எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர், மனைவி மற்றும் மகள்களுடன் பெரம்பலூர் முத்துநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வசித்து வரும் தனது அக்காவை பார்ப்பதற்காக குமார் நேற்றுகாலை திருச்சி சென்றார். மகாலெட்சுமியும் கணவரை வழியனுப்பி வைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்ற மகாலெட்சுமி, மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மூத்த மகள் ஜெய மீதும் ஊற்றியுள்ளார். கண் எரிச்சலுடன் தடுமாறிய ஜெய, ஏதோ விபரீதம் நடக்க போகிறது என பயந்து தங்கை மோனிகாவை இழுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.