பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.13: பெரம்பலூரில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்குவ தைப் போல ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்க ஆட்டோ ஒட்டுநர்கள், மாவட்ட தொ ழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம்  அருகில் உள்ள மாவட்டத் தொ ழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட சிஐடியு தொழிற் சங்கம் தலைமையில் அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் ஒன்று சேர்ந்து, தொழிற்சங்க கட்டுமான தொழிலாளர் களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது போல ஆட்டோ தொழிலாளர் களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவினை தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் வழங்கினர்.

Related Stories: