காரைக்கால்,ஜன.13: கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் கூட்டம் திருநள்ளாறு தியாகராஜ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் உடைய தலைவர் சிவ பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமை வகித்தார். மாநிலத்தின் செயலாளர் சிவ அர்தனாரி சிவாச்சாரியார், சிவ சிவராம சிவாச்சாரியார் ஆகியோர் இன்றைய சூழலில் பக்தர்கள் வருகை, ஆலய திருவிழாக்கள் ரத்து, ஆதி சைவ சிவாச்சாரியார்களின் ஜீவாதார பாதிப்பு குறித்து பேசினர். பொருளாளர் சிவ கீதாராம சிவாச்சாரியார் சங்கத்தின் நிதி அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் சிவ ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். ஆகம விதிகளை பின்பற்றி ஆலய பூஜைகளை குறைவின்றி நடத்திட வலியுறுத்தி மாநில துணை தலைவர் சிவ திருஞானசம்பந்த சிவாச்சாரியார் மற்றும் மாவட்ட இணைச்செயலர் ஹரிஹர சிவாச்சாரியார் பேசினர்.