திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்தாண்டில் மட்டும் குற்றங்களில் ஈடுபட்ட 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, எரிசாராயம் கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி, கடந்தாண்டில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் சாராய வழக்கில் தொடர்புடையவர்கள்.
கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.