வைகுண்டம், ஜன.13: வைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக வைகுண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் தலையில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி ஜெயக்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.