தூத்துக்குடி, ஜன. 13: தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் ஏற்பாட்டில் குரூஸ்புரம், மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50 பேர் திமுக பிரதிநிதி ராஜேந்திரன் தலைமையில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.