தென்காசி, ஜன. 13: தென்காசி அடுத்த வல்லம் அண்ணாதெருவை சேர்ந்தவர் பாலம்மாள் (74). இவர் கடந்த 4ம் தேதி அதிகாலை வெளியே நடந்துசென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒருவர், பாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தார். மொத்தம் 16 கிராம் எடைகொண்ட நகையில் 7 கிராம் பாலம்மாவின் கழுத்தில் தங்கிவிட்டது. மீதமுள்ள 9 கிராம் நகையுடன் தப்பிச்சென்றவர் குறித்து குற்றாலம்
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.