அம்பை, ஜன.13: சென்னை அஜய் சேதுபதியார் அறக்கட்டளை சார்பில் அம்பையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு இலவச வேஷ்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்குத் தலைமை வகித்த அஜய் சேதுபதியார் அறக்கட்டளை அறங்காவலர் அஜய் படையப்பன் சேதுபதியார், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசாக இலவச வேஷ்டி, சேலை, சட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவிற்கு அம்பை முகைதீன் ஜூம்மா பள்ளி தலைமை இமாம் பீர்முகமது ஆலிம், கிறிஸ்தவ மத போதகர் கிங்ஸ் ஹேமில்டன் சாமுவேல், அம்பை வக்கீல்கள் சங்கத்தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். முகைதீன் ஜூம்மா பள்ளி தலைவரான வக்கீல் சாகுல்ஹமீது மீரான் வரவேற்றார்.