கிரேன் மோதி மாஜி ராணுவ வீரர் பலி

திருவலம், ஜன.12: திருவலம் அடுத்த சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(75), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி, 2மகள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தன் சேர்க்காடு கூட்ரோட்டிற்கு சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். காட்பாடி சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கிரேன், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தனை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபாக இறந்தார். இதுகுறித்து கோவிந்தனின் மகன் பாபு திருவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கிரேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: