×

மொபட் மீது பஸ் மோதி மின்ஊழியர் பலி

செய்யாறு, ஜன.12: செய்யாறு அடுத்த பல்லி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(64). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் மொபட்டில் வீடு திரும்பினார். வந்தவாசி- காஞ்சிபுரம் சாலை சிப்காட் நுழைவு வாயில் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ், ெமாபட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கன்னியப்பன், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பீரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : electrician ,
× RELATED மின்வாரியத்திற்கும் இந்திய மரபுசாரா...