வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருச்செந்தூர், ஜன.12:திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி, இசக்கியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோயில்மணி மகன் ஜேசையா (34). இவர் நேற்று முன்தினம் பரமன்குறிச்சி உடன்குடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே ஊர் தபால் அலுவலகம் அருகில் வசிக்கும் ஜெயகாந்தன் என்பவரும், சீயோன்நகரை சேர்ந்த கனகராஜ், பரமன்குறிச்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கனகராஜூக்கும், ஜெயகாந்தனுக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானமாக செல்லும்படி ஜேசையா கூறினார். அவரை ஜெயகாந்தன் அவதூறாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் எஸ்எஸ்ஐ கனகராஜ் வழக்கு பதிவு செய்தார். சப்இன்ஸ்பெக்டர் அந்தோணி துரை சிங்கம் விசாரித்து வருகிறார்.

Related Stories: