நாங்குநேரி, ஜன. 12: நாங்குநேரி அருகே பாசனக் கால்வாயை அதிகாரிகள் தூர்வாராதால் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாங்குநேரியான் கால்வாயில் ஏராளமான தண்ணீர் பெரிய குளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரியகுளம் நிரம்பியதால் உபரி மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள மாலையிட்டான் மதகு திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் உபரி நீர் அங்குள்ள கால்வாய் வழியாக பம்பன்குளம் இளையனேரிகுளம் ஆழ்வார்குளம் பட்டர் புரம்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் இந்த கால்வாய் முறையாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பெரியகுளம் செட்டி மடை வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கிசான் மகாசபை நாங்குநேரி பகுதி தலைவர் விவசாயி வைகுண்டராஜன் கூறுகையில், ‘‘மாலையிட்டான் மதகு உபரி நீர் கால்வாய் பல்லாண்டுகளாக தூர்வாரப்படவில்லை.