காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நெல்லையில் நாளை பதவியேற்

திசையன்விளை, ஜன.12: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார், மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், தென்காசி மாவட்டத் தலைவர் பழனி நாடார் ஆகியோர் நெல்லை வண்ணார்பேட்டையில் செயல்படும் காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான செல்லப்பாண்டியன் பவனத்தில் நாளை (13ம் தேதி)  காலை 9 மணிக்கு பதவியேற்கின்றனர்.  விழாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, ரவிஅருணன்  முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் மாநில பொருளாளர்  ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாவட்ட பொருளாளர்கள் ஆலடி சங்கரையா, முரளி ராஜா, ராஜேஷ் முருகன் உள்ளிட்டோர் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.  எனவே, கட்சி நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என கட்சியினரும் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: