விகேபுரம் அருகே சிறுத்தை அட்டகாசம்

வி.கே.புரம், ஜன. 12: வி.கே.புரம் அருகே ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறிய சிறுத்தை, தாய் ஆட்ைடயும் கடித்துக்குதறி தூக்கிச் சென்றது.  விகேபுரம் அடுத்த வேம்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி. ஓய்வுபெற்ற எஸ்ஐ ஆன இவர், தனது வீட்டில் ஆடு மற்றும் அதன் 3 குட்டிகளை வளர்த்து வந்தார். இவை அனைத்தும் நேற்று காலை  வழக்கம்போல் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. இதனிடையே அப்பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று, இரு ஆட்டுக்குட்டிகளை கடித்துக்குதறியதோடு தாய் ஆட்டையும் கடித்துக்குதறி உணவுக்காக தூக்கிச் சென்றது. இதனிடையே மாலை 4 மணிக்கு சம்பவ இடத்திற்கு கணபதி சென்றபோது இதுகுறித்து தெரியவந்ததும் கணபதி, கடிபட்ட இரு ஆட்டுக்குட்டிகள் உள்ளிட்ட 3 ஆட்டுக்குட்டிகளை மீட்டுக்கொண்டு வீடு திரும்பினார். பின்னர் பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

Related Stories: