பாவூர்சத்திரம், ஜன.12: கிடப்பில் போடப்பட்ட தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாவூர்சத்திரத்தில் நடந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் செல்லப்பா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ஜெயக்குமார், சண்முகையா, பொதிகை சில்ஸ் மகபூப் மீரான், சுப்பிரமணியன், மாரிமுத்து, ராஜதுரை, மேகநாதன், கண்ணன், ஜேசுராஜன், சமுத்திர பாண்டி, ரவீந்திரகண்ணன் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கல்லூரணி சீனித்துரை வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன், பூங்கோதை எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், ராமநதி ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி விளையாட்டு போட்டிகள் நடத்துவது.