கடையம், ஜன. 12: புளியங்குடி நகரத்தைச் சேர்ந்த செல்வராஜ்பாண்டியன் மகள் சுகந்தி (24). பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கும், கடையம் அடுத்த ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் டேவிட்ராஜாவு (28) என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. டிப்ளமோ முடித்துள்ள டேவிட்ராஜா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தை அடுத்து 3 மாதங்கள் சென்னையில் குடும்பம் நடத்திவந்த தம்பதியருக்கு கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது.
இதன்காரணமாக கணவரை பிரிந்த சுகந்தி, தாய் வீடான புளியங்குடி திரும்பினார். இதே போல் கொரோனா ஊரடங்கால் கடந்த ஏப்ரலில் ஊர் திரும்பிய டேவிட்ராஜா, விவாகரத்து கோரி நெல்லை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இருப்பினும் கடந்த சில மாதங்களாக இருவரும் செல்போனில் பேசிக்கொண்டனராம். இதையடுத்து சேர்ந்து வாழ விரும்பிய சுகந்தி தனது விருப்பத்தை கணவருடன் கூறினார்.