நாமக்கல், ஜன.12: சேந்தமங்கலம் காந்திபுரத்தை அருகே அண்ணா நகரைச் சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: சேந்தமங்கலம் அண்ணா நகர் 17வது வார்டு திராவிடர் தெருவில், கடந்த 25 ஆண்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் புதியதாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் வசித்துவரும் காவல்துறையில் பணியாற்றி வருபவரும், அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரும் சேர்ந்து, தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சாக்கடை அமைந்திருக்கிறது எனக்கூறி, புதியதாக கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் பணியை தடுக்கிறார்கள்.இதனால் அருகே குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை ஏற்படுகிறது. எனவே, ஆக்கிமிரப்பில் உள்ள பஞ்சாயத்து நிலத்தை அளவீடு செய்து, புதிய சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.