பாப்பிரெட்டிப்பட்டி சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் ்கரும்பு அரவை பணிகள் பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி,  ஜன. 12: பாப்பிரெட்டிப்பட்டி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில்,  கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். தர்மபுரி  மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு  சர்க்கரை ஆலை சென்ற மாதம் அரவை துவங்கியது. இந்த ஆலையில் நிரந்தர  பணியாளர்களாக 243 பேரும், தினக்கூலியாக 186 பேர் என 429 பேர் பணியாற்றி  வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம்  கோரிக்கைகளை வலியுறுத்தி,  சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  வாராந்தர  விடுப்பு, வருடாந்திர விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் அல்லது அதற்கான  தொகையை சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.  இதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், ஆலை நிர்வாகம்  உடனடியாக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்னைக்கு  தீர்வுகாண வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: