செங்கல்பட்டு: சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு மகப்பேறு, அவசர சிகிச்சை, விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவுகள் உள்பட பல பிரிவுகள் உள்ளன. இதில், மூத்த மருத்துவர், செவிலியர் என ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினமும், செங்கல்பட்டு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தஞ்சாவூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு காலில் எக்ஸ்ரே எடுக்க சென்றனர்.