ரத்தின கிரீடத்தில் ரங்க நாச்சியார் பொதுமக்கள் குறைதீர் முகாமில் 260 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

திருச்சி, ஜன. 12: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் செயலி மூலம் 260 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்ஸ்அப் செயலி மூலம் 260 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்ற கோரியது, பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 69 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான 20 மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 35 மனுக்கள் உள்பட 260 மனுக்கள் பெறப்பட்டது.

Related Stories: