வரி விளம்பரங்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.71.42 லட்சம் உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், ஜன.12: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படும். இந்நிலையில் நேற்று கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.71,42,913 ரொக்கம் மற்றும் 779 கிராம் தங்க நகைகள், 2 கிலோ 818 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 17 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

Related Stories: