முசிறி அருகே சேவல் சண்டை நடத்தியவர் கைது

முசிறி, ஜன. 12: முசிறி அருகே சோளம்பட்டியில் சேவல் சண்டை நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். முசிறி அருகே உள்ள சோளம்பட்டியில் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டை போட்டியை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது தொட்டியபட்டியை சேர்ந்த சக்திவேல் (42) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 சண்டை சேவல்களையும், அங்கிருந்த 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: