திருவாரூர், ஜன.12: புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை உடனடியாக திறந்திட வேண்டும். மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சுர்ஜித் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.