பொங்கல் வியாபாரம் மந்தம் மடிக்கணினி வழங்க கோரி கொட்டும் மழையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன .12: மடிக்கணினி வழங்க கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கொட்டும் மழையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 2017-2018 கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிட வேண்டும். கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவர் நலன் கருதி, உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வீரையன், மாநகர செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: