முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்றக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன.12: முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்றக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. என்பிஎச்எச் மற்றும் என்பிஎச்எஸ் குடும்ப அட்டைகளை முன்னுரிமை (பிஎச்எச்) அட்டைகளாக மாற்றவும், அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் விமல்துரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் ஆலங்குடி தாசில்தார் யோகேஸ்வரனிடம் கோரிக்கை அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

Related Stories: