செல்போனுக்கு சார்ஜ்போட்ட போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி செட்டியாபட்டி அருகே சொரியன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மெய்யர்(30). விவசாயியான இவர் நேற்று வீட்டில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக சார்ஜரை சொருகினார். அப்போது அதன் வழியே மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே மெய்யர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்பட்டிவிடுதி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: