 30க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் காரைக்கால் அரசியலில் பரபரப்பு

காரைக்கால், ஜன.12: புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தியது காரைக்கால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம். இவர் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவரை முன்னிலைப்படுத்தியே முதல்வர் வேட்பாளராக அறிவித்து நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தற்போதுள்ள நாராயணசாமி முதல்வரானார். அதன்பிறகு சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியும் நமச்சிவாயத்திடம் இருந்து பறிக்கப்பட்டது. ஏ.வி .சுப்பிரமணியன் 2வது முறையாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இதையடுத்து விரக்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்று பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. நமச்சிவாயம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் காரைக்காலில் உள்ள பொதுப்பணித் துறையில் பணிபுரியும் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்) திடீர் ரகசிய கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான புகைப்படமும் வெளியாகி உள்ளது. இது காரைக்கால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: