×

கரூர் வடக்குப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர், ஜன. 12: கரூர் வடக்குப்பாளையம் பகுதியில் சிதிலடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் திருச்சி சாலையில் புலியூர் பகுதிக்கு முன்னதாக வடக்குப்பாளையம் பகுதி உள்ளது. நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், வடக்குப்பாளையம் செல்லும் சாலையின் குறிப்பிட்ட பகுதிகள் தொடர் மழையின் காரணமாக சேதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை செப்பனிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த வடக்குப்பாளையம் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : road ,area ,Karur North ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி