போலீசார் நடவடிக்கை நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும் பூஜாரிகள் பேரமைப்பு கோரிக்கை

கரூர், ஜன. 12: பூஜாரிகள் பேரமைப்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: சுவாமியின் திருமேனி தொட்டு பூஜை செய்யும் ஆண்டவன் தொண்டே தொண்டாக நினைத்து பூஜை செய்து வரும் பூஜாரிகளுக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் நல வாரியம் உறுப்பினர் அடையாள அட்டை கேட்டு தகுந்த படிவத்தில் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பதிவு செய்த பூஜாரிகளுக்கு இதுநாள் வரை நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்காமல் உள்ளது. மேலும், 2016 முதல் 17 வரை பூஜாரிகள் நல வாரிய அட்டை பெற்று பூஜாரிகளுக்கு நலவாரிய அட்டை பெற்ற பூஜாரிகளுக்கு மறுபதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு மறுபதிவு புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: