2 குழந்தைகளுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

கரூர், ஜன. 12: இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ராயனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(37). தனியார் நிறுவன ஊழியர். இவர், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மனைவி கருப்பாயி(31), 6வயது மகள் மற்றும் 9மாத ஆண் குழந்தையுடன் கடந்த 4ம்தேதி அன்று வெளியே சென்றவர் இது நாள் வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: