போடி/ஆண்டிபட்டி, ஜன. 12: போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26), பொறியியல் பட்டதாரி. இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கோழிப்பண்னையில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருகிறேன் என கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது போடி-சில்லமரத்துப்பட்டி சாலையோரம் புளியமரத்தின் அடியில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஒண்டிவீரன் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலையபோலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.