ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.12: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நயினார்கோவிலுக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மிகவும் பிரசித்தி பெற்ற நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அரியான் கோட்டை, பணிதிவயல், நகரம் வழியாக நயினார் கோவிலுக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள் கூறுகையில்,  கூடுதல் பஸ்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியல் உள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகின்றோம். ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, புலி வீரதேவன் கோட்டை போன்ற கிராமங்களில் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் சுமார் 45 கி.மீ சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: